சனி பெயர்ச்சியால் ராஜயோகம்!
2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் கும்ப ராசியில் சனிபகவான் பெயர்ச்சியாக உள்ளார். அனைத்து கிரகங்களின் பெயர்ச்சிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உண்டு என்றாலும், சனிப்பெயர்ச்சிக்கு மிக அதிக முக்கியத்துவம் உள்ளது.
சனிப்பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. சனியின் பெயர்ச்சியால் ஷஷ பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் உருவாகிறது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் மாறுவது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு மிகவும் அதிகமான நற்பலன்கள் கிடைக்கும்.
இந்த 5 ராசிக்காரர்கள் சனியின் சஞ்சாரத்தால் வலுவான பலன்களைப் பெறுவார்கள்.
மேஷம்: சனிப்பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். திடீர் பண ஆதாயம் உண்டாகும்.
ரிஷபம்: சனியும், ரிஷப ராசி அதிபதியான சுக்கிரனும் நட்பு கிரகமாக இருப்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றம் மிகவும் சுபமாக இருக்கும். சனியின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இப்போது திருமணம் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.
கன்னி: சனியின் சஞ்சாரத்தால் உருவாகும் ஷஷ ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பல வகையிலும் நன்மைகளைத் தரும். சண்டை சச்சரவுகளுக்கு தீர்வு கிடைக்கும். சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். மன அழுத்தம் நீங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் தற்போது நடந்துமுடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகரம்: மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசியில் பிரவேசிக்கும் சனி மகர ராசிக்கு அதிபதியாவார். ஆகையால், சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அவர்களின் தொழிலில் சிறப்பான வெற்றியைத் தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகள் பெரும் லாபம் அடைவார்கள்.
கும்பம்: சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பிரவேசிக்கவுள்ளார். இது ஷஷ ராஜயோகத்தை உருவாக்கும். இந்த யோகத்தினால் உருவாகும் மிகப்பெரிய நன்மை கும்ப ராசிக்காரர்களுக்கே கிடைக்கும். இவர்களின் அனைத்து பணிகளும் அதிர்ஷ்டத்தின் துணையுடன் வெற்றிகரமாக முடிவடையும். பழைய பிரச்னைகள் அனைத்தும் தீரும். கூட்டாண்மையில் வேலை செய்பவர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.