மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன், கடந்த 16ஆம் திகதி கணினி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த மாணவர் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்விகற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மினுவாங்கொடை, கம்பஹா மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள சாதாரண தர மற்றும் உயர்தர மாணவியர்களிடமே இவ்வாறு புகைப்படங்களை குறித்த மாணவன், பெற்றுக்கொண்டுள்ளார்.
சந்தேகநபரான பாடசாலை மாணவன் பிரபல்யமான மொடல் அழகிகளின் பெயர்களில் போலி வட்ஸ்அப் கணக்கொன்றை உருவாக்கி மொடல் அழகிகளாக விரும்பும் யுவதிகளுக்கு அதுகுறித்து அறிவித்து அவர்களுடன் தகவல் பரிமாறிக்கொண்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.