நிர்வாணமாக நடித்தது எப்படி தெரியுமா? : நகை பிரிகிடா பகீர் பேட்டி.!

    124
    0

    நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமாக வெளியாகியுள்ளது ‘இரவின் நிழல்’.

    தமிழ் சினிமாவில் பல புதுமையான முயற்சிகளை தனது படங்களில் கொண்டு வரும் பார்த்திபனின் தற்போதைய படைப்பாக வெளியாகியுள்ள ‘இரவின் நிழல்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

    பார்த்திபனின் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமான இரவின் நிழல் அண்மையில் வெளியானது. இந்த படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பார்த்திபனின் முயற்சியை வியந்து பாராட்டினார்.

    மேலும் பல திரையுலக பிரபலங்களும் படத்தை பாராட்டி தள்ளி வருகின்றனர். வசூலில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது இந்தப்படம்.

    ஆஹா கல்யாணம் என்கிற தொடரில் பவி டீச்சராக நடித்த பிரிகிடாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் உள்ளனர். பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிய சென்ற இவருக்கு ஹீரோயின் ரோலையே வழங்கி இருக்கிறார் பார்த்திபன்.

    மேலும் இந்தப்படத்தில் ஒரு காட்சியில் பிரிகிடா நிர்வாணமாக நடித்துள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. படம் வெளியாவதற்கு முன்பு பேட்டியில் இதுகுறித்து பேசிய பிரிகிடா, அந்த காட்சியில் புனிதம் மட்டுமே தெரியும் என கூறியிருந்தார்.

    இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் அந்த காட்சியில் நான் நிர்வாணமாகவே நடிக்கவில்லை. அது ஒரு ட்ரிக் என பிரிகிடா தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான பேட்டியில், அந்த ஷாட்டில் நடிக்க ரொம்பவே குட்டியான டிரெஸ் போட்டிருந்தேன். அது ஒரு எலாஸ்டிக் மாதிரி இருக்கும், அதை இழுத்து விட்டால், டிரெஸ் போட்டிருப்பது போல தெரியாது.

    ஆனால், அந்த அளவுக்கு குட்டியான உடையை அணிந்து நடிக்கவே ரொம்பவே கூச்சப்பட்டேன். ஆனால், அதை பலரும் நான் நிர்வாணமாக நடித்ததாகவே நினைத்து விட்டனர். உண்மையில், அது ஒரு ஏமாற்று வேலை தான். நான் நிர்வாணமாக நடிக்கவில்லை என தெரிவித்துள்ளார். பிரிகிடாவின் இந்தப்பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here