கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஷ்மிகா.
‘சுல்தான்’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் உள்ளனர்.
இவருக்கு பாலிவுட் சினிமாவில் இருந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் அண்மையில் மும்பையில் வீடு வாங்கி குடியேறினார். இவருக்கு துணையாக நாய்க்குட்டி ஆரா இருக்கிறது.
அடிக்கடி தனது செல்ல நாய்க்குட்டி ஆராவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் ராஷ்மிகா.
இந்நிலையில் தன்னுடைய செல்ல நாயுடன் உதட்டு முத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் ‘கொடுத்து வச்ச நாய்க்குட்டி’ என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
முதன்முறையாக ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
ஸ்ரீ வள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ள இந்தப்படத்தில் அவரின் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
புஷ்பா’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப்படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்திற்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.