பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் குறித்தது கமல் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கே இந்த சீசன் பிடிக்கவில்லை போல என கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 40 நாட்களை கடந்தும் இன்னும் சூடு பிடிக்கவில்லை. யாருமே இதுவரை முழுமையாக தங்களை வெளிப்படுத்தியதாக தெரியவில்லை.
இதனால் ஃபேவரைட் போட்டியாளர் இவர்தான், இவர் நேர்மையாக உள்ளார், முறையாக விளையாடுகிறார் என ரசிகர்களால் யாரையும் தர பிரிக்க முடியவில்லை.
ஒரு நேரம் ஒரிஜினாலிட்டி வெளிப்பட்டாலும் மறு நேரமே பூசி மொழுகி மாஸ்கை மாட்டி கொள்கின்றனர். இதனால் போட்டியாளர்கள் நடிப்பதாகவே உணருகிறார்கள் பார்வையாளர்கள். தங்களின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதில் ரொம்பவே கான்ஷியஸாக உள்ளனர்.
இதனால் இந்த சீசனில் போட்டியாளர்கள் கடந்த சீசன்களை பார்த்து இன்ஃபுளுயன்ஸ் ஆகியிருப்பது நன்றாகவே தெரிகிறது. இதன் காரணமாகவே கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் சற்று போரிங்காகவே உள்ளது.
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் பேசியது பார்வையாளர்களை போன்றே அவரும் உணர்ந்திருப்பது தெரிந்தது.
டாஸ்க்கின் போது ஹவுஸ்மேட்ஸ் விளையாடியதையும் கேட்கும் கேள்விக்கு அவர்கள் பதில் கூறுவதையும் பார்த்த கமல் பலருக்கு இன்னும் கேம்மை பற்றிய புரிதல் இல்லை என்றார். புரியாமல் விளையாடுகிறார்கள் என்றும் உண்மையாகதான் இருக்கிறார்களா என்று தோன்றுகிறது என்றும் கூறினார்.
இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுக்கும் இந்த சீசன் பிடிக்கவில்லை, பெரும்பாலான போட்டியாளர்கள் நடிக்கிறார்கள், யாரும் உண்மையாக இல்லை என்றே தோன்றுகிறது. இதே சந்தேகமும் குழப்பமும்தான் கமல் ஹாசனுக்கும் உள்ளது என கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.