சென்னை அம்பத்தூர் அருகே உள்ள பாடி கைலாசநாதர் கோயில் தெருவை சேர்ந்த 40 வயதான கோபி என்பவர், கார் மற்றும் ஆட்டோக்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இப்படியான சூழ்நிலையில் தான், கோபிக்கும் கொரட்டூர் காமராஜர் நகர் 9 வது தெருவில் வசிக்கும் 40 வயதான ராணி என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்த பழக்கம், நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இப்படியான சூழ்நிலையில் தான், கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் ராணியின் கணவர் உயிரிழந்தார்.
அந்த நேரத்தில், கோபியுடன் தனது அத்தை ராணிக்கு இருந்த கள்ளத் தொடர்பு பற்றிய விசயம், ராணியின் மருமகன் 22 வயதான நந்தகுமாருக்கு தெரிய வந்தது.
இதனால் முதலில் அதிர்ச்சியடைந்த மருமகன் நந்தகுமார், மாமியாருடன் இருக்கும் கள்ளத் தொடர்வை முதலில் கைவிடுமாறு பல முறை தனது மாமியாரை கண்டித்து இருக்கிறார். ஆனாலும், இவர்களது கள்ளக் காதல் அப்படியே தொடர்ந்து உள்ளது.
இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி இரவு ராணி வீட்டிற்கு கோபி வந்து உள்ளார். இதனை தெரிந்து, அங்கு வந்த மருமகன் நந்தகுமார், கோபியுடன் சண்டைக்கு சென்று உள்ளார். இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த நந்தகுமார், கோபியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில், அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கோபி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, மாமியாருடன் இருந்த கள்ளக் காதலை கைவிடாததால் கார் விற்பனையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.