Malayagam
Home » கணவரின் விபரீத ஆசை; உடலுறவின் போது மனைவி உயிரிழப்பு

கணவரின் விபரீத ஆசை; உடலுறவின் போது மனைவி உயிரிழப்பு

மந்திரவாதியை வரவழைத்து

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் வனராஜ். 50 வயதான இவர் தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகின்றார். இவர் ஏற்கனவே இரண்டுமுறை திருமணமானவர் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கணவரைப் பிரிந்து தனியே இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த பெண்ணொருவரை அவர் மூன்றாவதாகத் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலைவேளை படுக்கையறையில் அவரது மனைவி உடலில் இரத்தக்காயங்களுடன் இறந்துக் கிடந்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த அவர் இது குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு வனராஜிடமும் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர் .

இதன்போது ‘சம்பவ தினத்தன்று இரவு வனராஜூம், அவரது மனைவியும் மது அருந்தியுள்ளனர் எனவும், பின்னர், போதையில் இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாகவும், இதன்போது அவர் வலுக்கட்டாயமாக தனது கையில் இருந்த டோர்ச்லைட்டை, மனைவியின் உறுப்பில் வைத்து அழுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிறப்புறுப்பில் இருந்து அதிகளவிலான ரத்தம் வெளியேறியே அவர் இறந்துள்ளார் எனப் பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தபொலிஸார் , வனராஜைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed