Malayagam
Home » ‘இந்திய அணி’…தோல்விக்கு காரணம் இதுதான்: அருமையாக விளக்கிய சச்சின்..

‘இந்திய அணி’…தோல்விக்கு காரணம் இதுதான்: அருமையாக விளக்கிய சச்சின்..

அமீரகத்தில் கடந்த 17ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டிகள் நடந்து முடிந்து, தற்போது சூப்பர் 12 சுற்று ஆரம்பித்துவிட்டது. இதில் 12 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இரு குழுவிலும் ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் பங்கேற்கும். இதில் குறைந்தபட்சம் மூன்று வெற்றிகளை அதிக நெட் ரன் ரேட்டுன் பதிவுசெய்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

இந்திய அணி முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. நேற்று இரவு நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 110/7 ரன்கள் மட்டுமே அடித்தது. ஹார்திக் பாண்டியா (23), ரவீந்திர ஜடேஜா (26) இருவர் மட்டுமே 30+ ரன்கள் அடித்தார்கள். அடுத்துக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் (49), கேன் வில்லியம்சன் (33) ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இதனால், நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் 111/2 ரன்கள் எடுத்து அபார வெற்றியைப் பெற்றது.

இந்திய அணி இப்படி இரண்டு போட்டிகளிலும் மெகா தோல்வியைச் சந்தித்துள்ளதால், நெட் ரன் ரேட் -1.609ஆக சரிந்துள்ளது. இதனால், அடுத்தடுத்த போட்டிகளில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளுக்கு எதிராக பெரிய வெற்றியைப் பெற்றே ஆக வேண்டும்.

அப்படி வென்றாலும் கூட நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு ஏதோ இருக்கும்.

இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்றது எப்படி என்பது குறித்து சச்சின் பேசியுள்ளார். “6 ஓவர்கள் முடிந்தப் பிறகு 10ஆவது ஓவர்வரை இந்தியா 13 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

சுலபமான சிங்கில்களை எடுக்க முடியவில்லை. நாம் அந்த இடத்தில்தான் கோட்டைவிட்டுவிட்டோம். இதனால், பெரிய ஷாட்களை அடித்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டபோது, விக்கெட்களை இழந்தோம்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை பாராட்டினார். “பவர் பிளேவில் வில்லியம்சன் பௌலிங் சேஞ்சை அற்புதமாக செய்தார். 35 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர். அதில் 5 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கசிந்தது” எனத் தெரிவித்தார்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed