Malayagam
Home » வெடவெடக்க வைக்கும் போதை ஆசாமி.. சித்ரா எடுத்த “அந்த” முடிவு?

வெடவெடக்க வைக்கும் போதை ஆசாமி.. சித்ரா எடுத்த “அந்த” முடிவு?

சின்னத்திரை சித்ரா தன்னுடைய ரகசியங்களை காப்பதற்காகவே ஹேமந்தை காதலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் கொலையா தற்கொலையா என்ற வாதம் ஒருபுறம் இருந்து வர அண்மைக்காலமாக அவர் குறித்து பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே பல தகவல்களை கூறி வரும் நக்கீரன் புலனாய்வு பத்திரிகை அண்மையில் பகீர் தகவல்களை கிளப்பியுள்ளது. அதில் ஒன்றுதான் சித்ராவை பற்றிய ரகசியங்கள்!

வெடவெடக்க வைக்கும் போதை ஆசாமி.. சித்ரா எடுத்த "அந்த" முடிவு?

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை

இதுகுறித்து அந்த பத்திரிகையில் கூறியிருப்பதாவது: “சித்ராவின் அம்மா, ரேகா நாயர் சொல்வதை போல் சித்ரா கொலை செய்யப்படவில்லை. சித்ரா உடலை பிரேத பரிசோதனை செய்த கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் மருத்துவர் தற்போது ஓய்வுபெற்றுவிட்டார்.

பட்டுச் சேலையால் தூக்கு

அவரிடம் விசாரணை செய்ததில் பட்டுச் சேலையால் தூக்கு கயிற்றை பின்பக்கமாக போட்டதால் முன் கழுத்தில் எந்த அடையாளமும் ஏற்படவில்லை. தூக்கு போட்டதும் சித்ரா மனம் மாறி அந்த கயிற்றை அவிழ்க்க நினைத்துள்ளார். ஆனால் முடியவில்லை. அவருடைய நகக் கீறல்கள்தான் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்தது.

வெடவெடக்க வைக்கும் போதை ஆசாமி.. சித்ரா எடுத்த "அந்த" முடிவு?

கஞ்சா லோடு செய்யப்பட்ட 15 சிகரெட்டுகள்

சித்ராவின் ஹேண்ட் பேக்கில் கஞ்சா லோடு செய்திருந்த 15 சிகரெட்டுகள் இருந்தன என மரணத்தின் போது அந்த ஹோட்டல் அறையை ஆய்வு செய்ய வந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். எனவே சித்ராவுக்கு கஞ்சா, புகைப்பழக்கம், போதை, மது பழக்கம் என சகலமும் இருந்துள்ளது. ரேகா நாயர் கூறுவதை போல் சித்ராவுக்கு அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு இருந்தது உண்மைதான்.

போதை கும்பலுடன் சித்ராவுக்கு தொடர்பு?

இது போல் சீரியல்களில் வளர்ந்து வரும் பெண்களை மடக்கி கட்சி வித்தியாசம் பாராமல் அரசியல்வாதிகளுக்கு விருந்தாக்கும் செயல்களை அரசியல் செல்வாக்கு படைத்த ஒரு போதை கும்பல் செய்து வருகிறார்கள்.

இந்த கும்பலுடன் சித்ராவுக்கு தொடர்பிருக்கிறது. இந்த போதை கும்பலின் தலைவன் ஒருவருடன் ஹேமந்திற்கு பழக்கம் ஏற்பட்டது. ஹேமந்தும் லேசுபட்டவர் கிடையாது, அவருக்கும் மது, மாது, போதை பழக்கங்கள் இருந்தன.

அனைத்து ரகசியங்கள்

அவருக்கு சித்ரா குறித்து அனைத்து ரகசியங்களும் தெரியும். மீடியாவில் வளர்ந்து வரும் தான் திரைமறைவில் எப்படி என்பது குறித்த ரகசியங்களை ஹேமந்த் வெளியே சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவே சித்ரா ஹேமந்த்தை விருப்பமில்லாமல் காதலித்தார். திருமணம் செய்து கொள்ளவும் சம்மதித்தார். இந்த ரகசியங்களை வெளியே சொல்லக் கூடாது என்பதற்காக ஹேமந்துடனும் சித்ரா உல்லாசமாக இருந்துள்ளார்.

வெடவெடக்க வைக்கும் போதை ஆசாமி.. சித்ரா எடுத்த "அந்த" முடிவு?

விருப்பமில்லாத காதல்

ஹேமந்த்தே தனது காதலியான சித்ராவை பல விஐபிக்களுக்கு விருந்தாக்கியுள்ளார். சித்ராவின் எல்லா பழக்கவழக்கம் குறித்தும் அவரது அம்மாவுக்கு தெரியும். ஆனால் மறைக்கிறார். சித்ராவுக்கு தற்போது இருக்கும் வீட்டை தவிர்த்து இன்னொரு சொத்தும் இருக்கும். அதன் மூலம் வாடகை வருகிறது. இதை ஏன் சித்ராவின் தாய் மறைக்கிறார் என தெரியவில்லை.

சித்ரா எதற்காக இறந்தார்?

எனவே சித்ராவின் தாய் உண்மையிலேயே அவரது மகளின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க விரும்பினால், அவர் உண்மையை சொல்ல வேண்டும். மேலும் சித்ரா எதற்காக இறந்திருப்பார் என்பது ஹேமந்திற்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

எனவே அவரும் உண்மையை சொன்னால்தான் உண்மை புலப்படும்”. இவ்வாறு அந்த புலனாய்வு பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிகையின் யூடியூப் சேனலிலும் விவரிக்கப்பட்டுள்ளது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed