Malayagam
Home » வெட்டி படுகொலை செய்யப்பட்ட தமிழ் சின்னத்திரை கதையாசிரியர்

வெட்டி படுகொலை செய்யப்பட்ட தமிழ் சின்னத்திரை கதையாசிரியர்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் செந்தில் சுபாஷ் (வயது 38). இவர் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் தங்கி, சின்னத்திரை நாடகம் மற்றும் விளம்பர படங்களுக்கு கதை எழுதி கொடுக்கும் கதாசிரியராக பனி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி நண்பரை பார்க்க வெளியே செல்வதாக வீட்டில் கூறிவிட்டு செந்தில் சுபாஷ் சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இவரை அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இதற்கிடையே, சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த நிமிலன் என்பவர் விறகு வெட்டுவதற்காக சென்றார். அப்போது காட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மதுக்கரை காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த நபரின் தலையில் 3 இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. காவல்துறையினர் அவரது அருகில் கிடந்த செல்போனை எடுத்து அதிலிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது, பிணமாக கிடந்த நபர் மாயமான செந்தில் சுபாஷ் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மதுக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் ஈடுபட்டுள்ளனர்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed