பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கம்பஹா – உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச அலுவலகமொன்றில் பணிப்புரியும் பெண்ணொருவர் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல் நடத்தும் காணொளியொன்று கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.
இந்த சம்பவம் உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்றதாக கண்டறியப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று காலை இந்த பிரச்சினை சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ,இந்த விடயம் பாரதூரமென்பதால் மேற்படி பெண் முறைப்பாடு செய்யாமல் கூட பொலிஸார் அந்த பொறியியலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமென தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.