திருமணத்துக்குப் பின் தேனிலவு செல்வது ஏன்?
திருமண பந்தம் வாழ்வின் இறுதிவரை கூடவே வருவது. இந்த நீண்ட பயணத்தின் சிறந்த தொடக்கமாக தேனிலவுப் பயணம் அமையும்.
திருமணத்தைக் கொண்டாடும் தருணம்
உற்றார், உறவினர்கள் கூடி உங்கள் திருமணத்தைக் கொண்டாடியிருப்பார். திருமணத்துக்குப் பின்னர் உங்களது வாழ்க்கைத் துணையோடு அந்தத் தருணத்தைக் கொண்டாடத் தேனிலவு இன்றியமையாதது. திருமணத்தின் போது உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ இருப்பதால், அந்தத் தருணத்தைக் கொண்டாட தம்பதிகளுக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை. இந்தக் குறையைப் போக்கவே தம்பதிகளைத் தேனிலவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
நீண்ட பயணத்தின் துவக்கம்
திருமண பந்தம் வாழ்வின் இறுதிவரை கூடவே வருவது. இந்த நீண்ட பயணத்தின் சிறந்த தொடக்கமாக தேனிலவுப் பயணம் அமையும்.
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள உதவும்
காதல் திருமணம் என்றால் இருவரும் ஒருவரை ஒருவரை புரிந்து கொள்ள வாய்ப்புகள் ஏராளம். ஆனால், பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்றால், தேனிலவு அவசியமான ஒன்றாகும். திருமணத்துக்குப் பிறகு தம்பதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள தேனிலவு நாட்கள் உதவிகரமாக இருக்கும்.
தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்..?
புதுமணத் தம்பதிகளிடையே புரிதலை அதிகப்படுத்தும்
திருமணத்துக்குப் பின்னர், தம்பதிகள் இருவரும் மனம் விட்டு பேச தேனிலவில் வாய்ப்புகள் அமையும். இதனால் அவர்களிடையேயான புரிதலை அதிகப்படுத்தி திருமண வாழ்வு இனிக்க தேனிலவு கைகொடுக்கும்.
மறக்கமுடியாத பயணம்
திருமணம் முடிந்தவுடன் தம்பதிகள் தனியாக செல்லும் தேனிலவு, நிச்சயம் அவர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளைக் கொடுக்கும். பின் நாட்களில் பல்வேறு பயணங்கள் மேற்கொண்டாலும், தேனிலவுப் பயணம் கொடுக்கும் நினைவுகள் அலாதி இன்பத்தைத் தரவல்லது.
வேலைகளை மறந்து இன்புற்றிருக்க
அலுவலகம், வேலை உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களில் இருந்து விடுபட்டு புத்துணர்வு பெற தேனிலவு சிறந்த பயணமாக அமையும்.
திருமணத்துக்குப் பின் தேனிலவு
பெண்களே உங்க கணவன் கூட இந்த விஷயங்கள நீங்க சேர்ந்து செய்யணுமாம்…. இல்லனா நீங்க!
டீச்சருக்கு இது தேவையா…? இளைஞனை விரட்டி விரட்டி காதலித்து… கடைசியில் நடந்த கொடூரம்