பிக்பாஸில் நேற்றைய எபிசோட்டில் வாழ்கையில் நடந்த பூகம்பத்தை பகிரவும் என கூறப்பட்ட நிலையில், நடிகை விசித்ரா அவரது சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயங்களை பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.
100 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமான நடிகை விசித்ரா குக்வித் கோமாளி ஷோ மூலம் நல்ல பிரபலமாகி தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிக்பாஸ் 7வது சீசனில் நடிகை விசித்ரா முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார்.
அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளியை தொடர்ந்து தற்போது பிக்பாஸிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார். நேற்று 51வது எபிசோட்டில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அவர்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவத்தை பற்றி கூற வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அப்போது பேசிய விசித்ரா, தான் ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ தன்னை பார்த்து பெயர் கூட கேட்காமல், ‘இந்த படத்துல தான் நடிக்கிற நீ. ரூமுக்கு வா’ என்று மட்டும் கூறி அழைத்திருக்கிறார்.
Popular Actress and Tamil Biggboss S7 Contestant #Vichitra shares her shocking and personal bitter experience while shooting for her Tamil film years ago!#BiggBossTamil7 #BiggBossTamil #Vichithra #MeToo @Chinmayi pic.twitter.com/1RJimK0sag
— Akshay (@Filmophile_Man) November 21, 2023
“அன்று இரவு ரூமுக்கு சென்று தூங்கிவிட்டேன். அப்போது இருந்து பல்வேறு சிக்கல்கள் கொடுத்தார்கள். மாலை ஆனால் குடித்துவிட்டு அறையை வந்து தட்டுவார்கள். அதை எல்லாம் எப்படி சமாளிப்பது என வருத்தத்தில் இருந்தேன்.
அப்போது அந்த ஹோட்டல் மேனேஜர் ஆக இருந்தவர் தான் அறையை மாற்ற உதவி செய்தார். அந்த மேனேஜர் தான் இப்போது எனது கணவர்” என விசித்ரா கூறி இருக்கிறார்.
அதன் பின் படத்தின் ஷூட்டிங் கிராமத்தில் நடக்கும்போது ஒரு காட்சியில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் என்னை தகாத முறையில் தடவினார். பல முறை அப்படி நடந்தது. இறுதியில் அந்த கையை நான் பிடித்துவிட்டேன். அவனை அழைத்து கொண்டு போய் ஸ்டாண்ட் மாஸ்டரிடம் கூறினால் அவரை என் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டார்.
அது பற்றி நான் சங்கத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் எனக்கு ஆதரவாக யாருமே வரவில்லை. அதையெல்லாம் விட்டுட்டு போய் வேலையை பாருமா என சங்க தலைவர் கூறியது எனக்கு இப்போது நினைவில் இருக்கிறது.
சங்கத்திற்கு எல்லாம் வராதீங்க, போய் போலீஸ்ல புகார் கொடுங்க என வெளிப்படையாகவே சொன்னாங்க. இதற்கு பிறகு தான் சினிமா துறையே வேண்டாம் என விலகிவிட்டேன். ஆனால் இன்னும் எனக்கு சினிமா மீது மிகுந்த ஆசை உள்ளது. அதை எல்லாம் உதறிவிட்டு குடும்பம் என வாழ்ந்தேன். என கண் கலங்க பேசினார் விசித்ரா.